Sunday 28 June 2015

சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)


சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)

தேவையானவை
  • சாமை அரிசி - 500 கிராம்
  • நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம்
  • வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), 
  • இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
  • சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு
  • தயிர் - அரைக் கோப்பை
  • புதினா - ஒரு கைப்பிடி அளவு
  • எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.      
     தாளிக்க
  • நெய் - 100 மி.லி., 
  • கிராம்பு - 5, 
  • ஏலக்காய்
  • பிரிஞ்சி இலை - தலா 2,
  • பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு

.
செய்முறை

       கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும்.


பலன்கள்

        நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.

No comments:

Post a Comment