குதிரைவாலி
வெண்பொங்கல்
தேவையானவை:
- குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை,
- பாசிப் பருப்பு - கால் கோப்பை,
- மிளகு - ஒரு தேக்கரண்டி,
- நெய் - ஒரு மேசைக்கரண்டி,
- வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி,
- கறிவேப்பிலை - 2 ஆர்க்,
- நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
குதிரைவாலி,
பாசிப்பருப்பு,
மிளகு,
உப்பு
சேர்த்து,
வழக்கமான
பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள்.
நெய்யில்
மிளகு,
கறிவேப்பிலை
தாளித்துக் கொட்டி,
மேலே
மிதக்கவிட வேண்டும்.
மேலே
கொஞ்சம் வறுத்த முந்திரிப்
பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம்.
இதன்
சுவை,
மீண்டும்
மீண்டும் குதிரைவாலியைத்
தேட வைக்கும்.
பலன்கள்:
சுவையிலும்
மருத்துவத்தன்மையிலும் ஈடு
இணையற்றது.
புரதம்,
இரும்புச்
சத்து,
உயிர்ச்
சத்துகளும் அதிகம்.
எல்லாவற்றையும்விட
நார்ச் சத்து மிக அதிகம்.
தொற்றாநோய்க்
கூட்டங்களான சர்க்கரை நோய்,
ரத்தக்
கொதிப்பு,
புற்றுநோய்,
இதய
நோய்களைத் தவிர்க்க மிக
அவசியமானது நார்ச் சத்து.
கரையும்
நார்கள்,
இதய
நாளங்களில் படியும் கொழுப்பைக்
கரைக்கவும் சர்க்கரை திடீர்
என ரத்தத்தில் உயராமல்
இருக்கவும் பெருமளவு பயனாவதை
உறுதிப்படுத்துகின்றன.
ஆக,
நார்ச்
சத்து மிக முக்கியமான ஒரு
சத்து.
அளவில்லா
நார்ச் சத்தைச் சுமந்து
இருக்கும் வரகும் சாமையும்
குதிரைவாலியும் அற்புதமான
தானியங்கள்.
No comments:
Post a Comment