தினை
காரப் பணியாரம்
தேவையானவை:
- தினை அரிசி - 500 கிராம்,
- உளுந்து - 250 கிராம்,
- வெந்தயம் - 3 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு,
- கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி,
- சின்ன வெங்காயம் - 250 கிராம்,
- மிளகாய் - 4, எண்ணெய்,
- கறிவேப்பிலை - தேவையான அளவு,
- சீரகம் - சிறிதளவு.
செய்முறை:
தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
கடலைத்
துவையல்,
புதினாத்
துவையல்,
தேங்காய்ச்
சட்னியுடன் தொட்டுச் சாப்பிட
சுவையாகவும் சத்தாகவும்
இருக்கும்.
பலன்கள்:
தினை
காரப் பணியாரத்தில் புரதம்
மற்றும் நார்ச் சத்து அதிகம்
உள்ளது.
சர்க்கரை
நோயாளிகளுக்கு நல்ல பலன்
தரும்.
குழந்தைகளுக்கு
நல்ல ஊட்டச் சத்து உணவாக
இருக்கும்.
காரப்
பணியாரம் செய்து கொடுத்தால்,
விரும்பிச்
சாப்பிடுவார்கள்.
No comments:
Post a Comment